Udanz

Pages

Saturday, June 15, 2013

இந்தோனேஷியா தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சரஸ்வதி சிலையை, அமெரிக்காவுக்கு, பரிசாக அளிக்கவுள்ளது


எஸ்.ஆறுமுகம், சென்னையிலிருந்துஎழுதுகிறார்: இந்தோனேஷியா, இஸ்லாமிய நாடு என்பது, உலகம் அறிந்த உண்மை. ஆனால், அந்த நாடு, தன் கரன்சியில், இந்துக்களின் முதல் கடவுளான, பிள்ளையாரின் உருவத்தை அச்சிட்டு உள்ளது.இப்போது, அமெரிக்காவில், வாஷி
ங்டன் நகரில் உள்ள இந்தோனேஷியா தூதரகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சரஸ்வதி சிலையை, அமெரிக்காவுக்கு, பரிசாக அளிக்கவுள்ளது.
உண்மையான மதச் சார்பின்மைக்கு, இந்தோனேஷியா உதாரணமாக உள்ளது.இஸ்லாமிய மதத்தில் உருவ வழிபாடு கிடையாது. அதனால், அம்மதத்திற்கென சிலைகள் எதுவும் கிடையாது.
ஆனால், கிறிஸ்தவ மதத்தில், இயே”, மேரி, குழந்தை இயே” என்று சிலைகள் உண்டு. அமெரிக்கா கிறிஸ்தவ நாடு. இந்தோனேஷியா நினைத்திருந்தால், இயே”, மேரி போன்றவற்றில் ஒரு சிலையை வழங்கி இருக்கலாம். ஆனால், இந்துக் கடவுளான சரஸ்வதி சிலையை, பரிசாக வழங்கி உள்ளது.படைக்க, காக்க, அழிக்க என்று, இனம் பிரித்து வகைப்படுத்தி, கடவுள்களைக் கொண்டிருக்கும் ஒரே மதம், இந்து மதம்.
அதில் எந்தக் கடவுள் சிலையையும், இந்தோனேஷியா தயாரிக்கவில்லை. கல்விக் கடவுள் என்று வணங்கப்படும் சரஸ்வதி சிலையை, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இது தானய்யா மதச் சார்பின்மை...அமெரிக்காவுக்கு, இந்தியா ஏதாவது சிலையை பரிசளிப்பதாக இருந்தால், கிறிஸ்தவ மத சம்பந்தமான, ஒரு சிலையைத் தான் வழங்கி இருக்கும்.
ஆனால், இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, கிறிஸ்தவ நாடான அமெரிக்காவுக்கு, இந்துக் கடவுளான சரஸ்வதி சிலையை பரிசாக அளித்து, மதச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி உள்ளது. போலி மதச் சார்பின்மை பே”ம் நம் நாட்டு அர”ம், அரசியல்வாதிகளும், வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம் இது.

மதச்சார்பின்மைக்கு "மீனிங்' இது தான்!

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj

மணிவண்ணன் மரணம் குறித்த பகிர்வுகள்... எனது வலையில்


தமிழகத்தில் பிரம்மாண்ட இயக்குனர்கள் பலபேர் இருந்தார்கள்,இருக்கிறார்கள்.அவர்கள் மக்கள் பிரச்சனைகளை படத்தில் மட்டும் காட்டினார்களே தவிர மக்களுக்காக வீதிக்கு வந்துப் போராடவில்லை! தங்கள் குரலை தமிழர் நலனுக்காக ஒலிக்கச் செய்யவுமில்லை! ஆனால், இயக்குனரும் நடிகருமான மணிவண்ணன் வாழ்ந்தவரை தான் ஒரு திரைத்துறையை சார்ந்தவன் என்ற கர்வமில்லாமல் ஒவ்வொரு தமிழர் பிரச்சனைக்கும் தமிழனாக களம் வந்து போராடியிருக்கிறார்! அழுத்தமாக குரல் கொடுத்திருக்கிறார் ! பிரச்சனைக்கான களம் கண்டிருக்கிறார் !.... தான் என்ற கர்வம் ஆணவம்,அகங்காரம் பிடித்த பாரதிராஜாவின் வன்மம் மிகுந்த சொற்களை மணிவண்ணனின் ஆன்மா நிச்சயம் மன்னிக்காது! போராளி மணிவண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ! - வினி சர்பனா

: மணி கடந்த சில வருடங்களாகவே மிகுந்த soften ஆகி, தன் சாவை எதிர்நோக்கியவராக ஒரு உடல்மொழியை கொண்டிருந்தார்

மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்

### :)
மணிவண்ணனும் நானும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். அவர் என்னை விட ஆறு மாதம் இளையவர். அவரை எழுபதுகளிலிருந்தே நான் அறிந்திருந்தேன். அப்போது ஓரிருமுறை, பீட்டர்ஸ் காலனியில் இருந்த என் வீட்டுக்கு என்னை சந்தித்துப் பேச வந்திருக்கிறார். திராவிட இயக்கத்தின் தாக்கம் இருந்தபோதும் அதை விடக் கூடுதலாக அப்போது எங்களிடம் இடதுசாரிப் பார்வையே மிகுந்திருந்தது. அவர் நேரடியாக தேர்தலைப் புறக்கணித்த மார்க்சிய லெனினிய இயக்கங்களுடன் சேர்ந்திருந்தார். நான் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லா இடதுசாரி முயற்சிகளுக்கும் ஆதரவு அளித்து பேசவும் எழுதவும் முயற்சிப்பவனாகத் தொடங்கியிருந்தேன். இடதுசாரிகள் கலை உலகில் இல்லாத, நுழைய இயலாத சூழல் இருந்த அப்போது, ( இப்போதும் ?) மணிவண்ணன் இடதுசாரிகள் கலை உலகில் அழுத்தமாக வேலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டு சென்ற மிகச் சிலரில் ஒருவர். ஓரிரு சந்திப்புகளுக்குப் பின் அவருடன் தொடர்பு இருக்கவில்லை, பின்னால் அவர் இனி ஒரு சுதந்திரம் படத்தை எடுத்தபோது அவரே என்னுடன் தொடர்பு கொண்டு நான் படத்தைப் பார்க்க வரவேண்டுமென்று நேரில் அழைத்தார். பரந்த இடது, ஜனநாயக தமிழ் உணர்வு அரசியலை அவாவுபவராகவே எப்போதும் இருந்தார். கடைசி வரை அவரிடம் எழுபதுகளின் லட்சியவாத வேட்கை உள்ளுக்குள் கனன்றுகொண்டே இருந்ததை அவரது செயல்பாடுகளை தொடர்ந்து பார்க்கும்போது எங்கள் தலைமுறையினரால் உணரமுடியும். வணிக வட்டத்துக்குள் இருந்தபோதும் அவர் படங்களில் மிகையான பாலியலும் வன்முறையும் இராது. யதார்த்த வாழ்க்கையின் உணர்ச்சி அழுத்தமான பாத்திரங்களும் நிகழ்ச்சிகளுமே அவருக்குப் பிடித்தமானவை. நடிகரானதும் அவர்தான் தமிழ் சினிமாவில் மீண்டும் எம்.ஆர்.ராதா பாணியைக் கொண்டு வந்தார். உள்ளத்தை அள்ளித் தா படத்தில் அவரது இரட்டை வேட நடிப்பு அவரது நடிப்புத் திறமைக்கு ஒரு சான்று. சொந்த ஆதாயத்துக்கு உகந்த அரசியல் கட்சிகளுடன் ஒருபோதும் இணையாமல், கடைசி வரை மாற்று அரசியலுக்கான எழுபதுகளின் ஏக்கத்துடன் வெவ்வேறு சிறு இயக்கங்களின் ஆதரவாளராகவே அவர் இருந்தது நாம் கவனிக்கத் தக்கது. சில மாதங்கள் முன்பு ஒரு பொது நிகழ்வில் அவரை சந்தித்தேன். அவர் உடல்நலம் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். ‘தப்பையெல்லாம் திருத்திக் கொண்டு விட்டேன். மெல்ல மெல்ல சரியாகிவருகிறேன். சீக்கிரமே பழையபடி இயங்குவேன்’ என்று என் கையைப் பிடித்தபடி உணர்ச்சியுடன் சொன்னார். விரும்பியபடி செய்யமுடியாமல் அவர் திடீரென போய்விட்டது வருத்தமாகவே இருக்கிறது. அவரை அரண்மனை சோறு ஒத்துக் கொள்ளாத பிச்சைக்காரன் என்று அவரால் ஆதாயம் அடைந்த ஒரு அரண்மனை தங்கக் கூண்டுக் கிளி சொன்னது, மணிவண்ணன் மீதான வசவு அல்ல. அது அவருக்கான நிஜமான பாராட்டு. ஏனென்றால் அரண்மனைகளுக்குள் தன் உடல் நுழையும் வாய்ப்பு கிடைத்தபோதும் மணிவண்ணன் மனம் சக பிச்சைக்காரர்களுக்காகவே சிந்திக்கக் கூடிய மனம்.
ஒருவரின் மரணத்தை வைத்து தங்கள் அநாகரிகமான கருத்துக்கள் மூலம் மீண்டும் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் மக்களில் இருந்து தனிமைபடுத்த படுகிறது....... 
சொந்த இன மக்களின் குருதி ஓடிய நாட்களிலும் அவர்கள் பிய்த்து எறியப்பட்ட போதும் இவர்களே கள்ள மௌனம் காத்து பெரும்பான்மை தமிழர்களுக்கு இந்த விடயம் தெரியாதவாறு பார்த்துக்கொண்டனர்...... 
இன்று ஒரு பச்சை தமிழனின் மரணத்தில் குளிர்காயும் உடன் பிறப்புகள் தங்கள் தலைவன் சாகாவரம் பெற்றவன் என்று நினைத்துக்கொள்கிறார்கள் போலும் ...... 
நிச்சயமாய் சொல்லுகிறேன் ஒருவேளை கருணாநிதி இறந்தால் அது தமிழ்த்தாய்க்கு பிடித்த சனி விலகியதொரு நாள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


அண்ணன் மணிவண்ணன் அவர்கள் நல்ல இயக்குனர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, சமூக போராளி,முக்கியமாக நல்ல மனிதர்.
அவர் இறப்பு எண்ணை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது !!!
மரணம் என்பது அனைவருக்கும் சமம் !!!
எனது ஆழ்ந்த இரங்கல் .

May Ur soul R.P.I
 — feeling down.
பாரதி ராஜா உக்கார மணீவண்ணன் விழுந்துட்டார் என்று எழுதுகிறவர்களைப் பார்க்கிறேன் ! மணிவண்ணன் அவ்வளவு விமர்சனங்களுக்கு பயந்த கோழையும் அல்ல.. ராஜா உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கொடூரமானவரும் அல்ல ! ஆனாலும் ஒரு மேற்கத்திய பொன்மொழி / வாக்கியம் ஞாபகம் வருகிறது. “யார் மனதையும் உங்கள் சொற்களால் புண்படுத்திவிடாதீர்கள் . . . ஒரு வேளை அதுவே உங்கள் கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம்” . ரெஸ்ட் இன் பீஸ்... மணிவண்ணன் தோழரே !


இயக்குனர் மணிவண்ணன் காலமானார் என்று கேள்விப்பட்டேன். இளம் வயதில் குறைந்த காலம் எழுத்து ஓவியராக எங்கள் கலையகத்தில் அவர் பணி புரிந்த நினைவுகள் என்னை உலுக்குகின்றன .


நடிகரும் , இயக்குநருமான மணிவண்ணனின் இறப்புச்செய்தி சில காட்சி ஊடகங்களில் இரட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. மரணத்திலும் அரசியல்...

எந்த ஒரு மரணத்தில் மகிழ்வதும் தவறே!! 

அது மணிவண்ணனாக இருந்தாலும், ஜெயலலலிதாவாக இருந்தாலும், சீமானாக இருந்தாலும் , வைகோவாக இருந்தாலும் ...

பன்றிகள் தின்பது என்பதற்காக நீங்களும் அதை தேடாதீர்கள் !!
RIP .. Manivannan sir .. One of the best actor and director . :-(



  • காலையில் விகடனில் மணிவண்ணன் குறித்த பாரதிராஜாவின் அசிங்கமான பதிலைப் படித்த நிலையில், மணிவண்ணனின் திடீர் மரணம் கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது.
    # RIP_ManiVannan

    இறந்தவர்களை தவறாக பேசக்கூடாது என்ற நாகரீகத்திற்காக மணிவண்ணன் பற்றி நல்லவிதமாக எழுதி பாரதிராஜாவை திட்டி எழுதுவதாகவே நான் கருதுகிறேன். ஒருவேளை அவர் உயிரோடு இருந்து பாரதிராஜாவின் கருத்திற்கு எதிர்கருத்து சொல்லியிருந்தால், பாரதிராஜா-மணிவண்ணன் என்று ஃபேஸ்புக் உலகம் இரு கூறாக பிரிந்து வாத, பிரதிவாதங்களில் ஈடுபட்டிருப்பார்கள். 

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj

அமைதி(ப்படை)யான மணிவண்ணன்

ப்ளாக் போஸ்ட் போட்டு நாளாச்சே...
- நேற்று பதிவர் தினமன்று கூட ஒரு பதிவும் போடவில்லை...
இனறு மணி அண்ணன் போட வைத்துவிட்டாரே...

ஆனைமலை பரம்பிக்குளம் ஆற்றுப் பாலத்தின் மீது ”தோழர் பாண்டியன்” படப்பிடிப்பு (அமைதிப்படை வெற்றிக்குப் பிறகு) - ஷூட்டிங் பார்ப்பதெல்லாம் யாருக்குப் பிடிக்கும், கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு கிளம்பலாம் போலிருந்தது. இடைவேளையில் போட்டோ எடுக்கவேண்டும் என்று நண்பர்கள் சொல்ல...கட் சொல்லி வந்த இயக்குனர் மணிவண்ணனிடம் இயல்பான பேச்சு, அதென்ன போட்டா தானே எடுத்துட்டாப் போச்சு என்றார்...படப்பிடிப்பு குழு என்று அணைவரும் படிக்கட்டுக்கு கிழே, மேல என இரண்டு வரிசையாக நிற்க...எனக்கு மேல் நேரே மணி அண்ணன்...தம்பி கொஞ்சம் நகர்ந்து நில்லுங்க போட்டோவுல என் வயிறு தெரியாது..அப்புறம் என்னை யாருன்னே தெரியாதுல்ல...என் பாணை வயிரு தான் என் அடையாளமே என்று நக்கல் அடித்துக் கொண்டிருந்தார்... அவரது இயல்பான வசனம், பேச்சு நடை தான் கொங்கு மண்டலத்தினை திரையுலகில் பிரதிபலிக்க வைத்தது...

அவரது வசனங்களில் கலகலக்க வைக்கும் சத்யராஜ், கவுண்டமணி ஜோடிக்கு இது பேரிழப்பாகும்...
வசனங்களில் மட்டுமல்ல வித்யாசாமாக பெயர் வைப்பதிலும் அண்ணன் கலக்குவாரே... #ஆப்பாயில் ஆறுமுகம் 
- ஆர்ப்பாட்டத்தில் அமைதி(ப்படை)யான மணிவண்ணன் ஆத்மா சாந்தியடையுமாக 

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj

Monday, June 10, 2013

கோவை, உக்கடம், பெரியகுளத்தை தூர்வாரும் மகத்தான பணியில் ஓயாத மக்கள் அலை...


கோவை, உக்கடம், பெரியகுளத்தை தூர்வாரும் மகத்தான பணியில், நேற்று மட்டும் 10 ஆயிரம்பேர் பங்கேற்றனர். பெரியகுளத்தை தூர்வாரும் பணி, கடந்த மாதம் 2ம் தேதி துவங்கியது. இப்பணியை "ராக்' அமைப்பிடம், மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதில், "சிறுதுளி' அமைப்பும் இணைந்துள்ளது. பருவமழை துவங்கும் முன், பணியை முடிக்க, நவீன இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணி தீவிரமடைந்துள்ளது. இப்பணியில், பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, ஞாயிறு தோறும் "ஊர்கூடி தூர்வாரும்' நிகழ்வும் நடந்தது. பல ஆயிரம் மக்கள், உணர்வுப்பூர்வமாக பங்கேற்று, தங்களின் வியர்வையை குளத்துக்கு காணிக்கையாக்கினர். குளம் தூர்வாரும் பணியில் மக்கள் பங்கேற்பது, நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று மட்டும், ஏறத்தாழ 10 ஆயிரம் மக்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுப்பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என, பல அமைப்புகள் களம் இறங்கி தூர்வாரியதாக, "ராக்' அமைப்பினர் தெரிவித்தனர். மக்கள் வெள்ளம், கரைபுரண்டதால், உக்கடம் குளம் எங்கும் மனித தலைகளால் நிரம்பியது. இயற்கையை நேசிப்போர் சிந்திய வியர்வை துளிகளால், குளத்து மண்ணில் ஈரம் கசிந்தது. உக்கடம் குளத்தின் மொத்த பரப்பு 326 ஏக்கர். இதில், 80 ஏக்கர் அளவுக்கு தற்போது தண்ணீர் உள்ளது. இதுவரை, 197 ஏக்கரில் தூர்வாரப்பட்டுள்ளது. இன்னும் 25 ஏக்கர் மட்டுமே, பணிகள் நடக்க வேண்டியுள்ளது.பறவைகள் ஓய்வெடுக்கவும், கூடுகட்டி வாழவும் வசதியாக, 175 மீட்டர் அகலம், 12 மீட்டர் உயரத்தில் 4 தீவுகள் குளம் நடுவே அமைக்கப்பட்டுள்ளன. குளக்கரையில், 6 கி.மீ., சுற்றளவுக்கு மண் கொட்டி பலப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, "சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், "ராக்' அமைப்பின் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கூறியதாவது:தூர்வாரும் நிகழ்வில், இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது, கோவை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்துவிட்டது. தற்போது, தூர்வாரும் பணி முடிந்துள்ளது. குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் வேலைகளை துவங்க வேண்டும். குளத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தீவுகளில் கனி மரங்களை நட்டு, பறவைகள் தங்குவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இக்குளத்தில் நான்கு இடங்களில், சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. நான்கு குழாய்களையும் ஒன்றாக இணைத்து சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து, அதன்பிறகு தண்ணீரை குளத்தில் விடுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். இதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் உதவியை கேட்டுள்ளோம். உக்கடம் குளம் சீரமைப்பு பணிக்காக, கோவை எம்.பி., நடராஜன் 50 லட்சம் ரூபாய், தொகுதி நிதியில் இருந்து வழங்க முன்வந்துள்ளார், என்றனர்.



கரசேவைக்கு கைகொடுத்தோர்!



மாநகர போலீசார் 1000 பேர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கோவை மெரைன் கல்லூரி மாணவர்கள்தேசிய மாணவர் படையினர்"தினமலர்" நாளிதழ் ஊழியர்கள் ஆம் ஆத்மி கட்சி கண்ணம்பாளையம் பசுமை திட்டம் அமைப்பினர் விமானப்படை வீரர்கள் எல்.ஐ.சி., ஊழியர்கள் ஈஷா யோக மையம் சூரியா சேவா சங்கம் இயற்கை பாதுகாப்பு சங்கம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கார்மேக்கர் கார்டன் அமைப்பு சோசியல் டெமாக்கரடிக் பார்ட்டி மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம் முன்னேற்ற கழகம் லோக் சக்தா கோவை தகவல் தொழில் நுட்ப அமைப்பு (சி.ஐ.டி.ஏ.,)ஒய்ல்டு விங் சொசைட்டிநேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டிஇயற்கை பாதுகாப்பு குழு சி.எம்.எஸ். கல்லூரி, கோவை அக்வா குரூப். ரெய்ன்போ வாக்கர்ஸ் ரேடியோ சிட்டிகொடிசியா வீ எஸ். அலாய்ஸ் ஹீமோபீலியா சாசைட்டிமதுக்கரை "ஏசிசி' நிறுவனத்தினர் காளம்பாளையம் மக்கள் நிக் டியூசன் சென்டர் பூமார்க்கெட் அரேபியா ஹாஸ்டல்புல் மெசின்ஸ் நிறுவனம் இந்தியன் டென்டல் அசோசியேஷன் லயன்ஸ் ஓரியன் கிளப் ஏர்கண்டிஷன் ஓனர்ஸ் அசோசியேஷன் பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனம் கோவை நுகர்வோர் மற்றும் வினியோகஸ்தர்கள் அசோசியேஷன் பேப்பர் வியாபாரிகள் சங்கம் ஏ.பி.டி., நிறுவனம் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமம் மற்றும் பல அமைப்புகள், மக்கள் குழுக்கள்.




குளம் தூர்வாரிய மக்களுக்கு உணவு, உபகரணம் அளித்தோர்:



உணவு: அன்னபூர்ணா ஓட்டல் மற்றும் ஓட்டல் ஓனர்ஸ் அசோசியேஷன் குடிநீர்: சபோல் மினரல் வாட்டர், பாரதிராஜா வாட்டர் சர்வீஸ் இனிப்பு: பி.எஸ்.ஜி., குழுமம் போட்டோ: போட்டோ சென்டர் கோவைவீடியோ: ஐ.ஏ.பி., கோவை மண் அள்ளும் உபகரணங்கள்: பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் ஹார்டுவேர் அசோசியேஷன், கோவை 

குறிப்பு:
உக்கடம் பெரியகுளம் தூர்வார மக்கள் திரண்ட செய்தியைப் படிக்கும் போதே சிலிர்ப்பு. ஏன் நொய்யல் பாதுகாப்புக் குழுவுக்கு இந்த யோசனை வரல ? நம்மாலும் 100 சட்டி மணலை அள்ள முடியாதா என்ன ?
- எதுக்கும் ஒரு வேண்டுகோளைப் போட்டு வைப்போம்...
தேதியைச் முடிவு பண்ணிச் சொல்லுங்க என்னால் ஒரு பத்து பேரைக் கூப்பிட்டு வர முடியும்...
ஃபேஸ்புக் வாயிலாக ஒரு 1000 பேருக்கு தகவல் சொல்லமுடியும்... 
நொய்யல் பாதுகாப்பு அமைப்பு ஆவன செய்யுமா ?

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj

Sunday, June 9, 2013

நரேந்திர மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் !


ம.மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 

"சிறப்பாக செயல்படும் அரசின் சிறு தவறுகளை, மக்கள் மன்னிப்பர்' என்கிறார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.மோடி அவர்களே... தங்கள் கணிப்பு மிகவும் தவறானது. தமிழகத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் ஆட்சிக் காலத்தில், எத்தனையோ மேம்பாலங்கள் கட்டினார். அனைவருக்குமே இலவச, "டிவி' அளித்தார். ரேஷன் கடையில், மலிவு விலையில் அரிசி வழங்கினார்.என்ன பிரயோஜனம்? தினமும் மூன்று மணி நேரம் மின்வெட்டை தவிர்க்க, அவர் கவனம் செலுத்தவில்லை. தமிழக மக்கள், கருணாநிதியின் நல்ல திட்டங்களுக்காக, மின்வெட் டை பொறுத்துக் கொள்ளவில்லை. அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக ஓட்டளித்து, அவருக்கு நிரந்தர ஓய்வு கொடுத்து விட்டனரே!தருமி கொண்டு வந்த பாடலில், குற்றம் கண்டுபிடித்தார் நக்கீரர். சிவபெருமான் நேரில் வந்து, "என் பாடலில் குற்றம் சொன்னாயா?' என்று, நெற்றிக் கண்ணைக் காட்டினார். தினந்தோறும் வழிபடும் சிவபெருமான் என்று, நக்கீரர் பயப்படவில்லையே... "நெற்றிக் கண் திறப்பினும், குற்றம்
குற்றமே' என்று தானே சொன்னார் நக்கீரர்.மோடி சொல்வது போல், மக்கள் மாங்கா மடையர்கள் அல்ல. எத்தனையோ திட்டங்களை அளித்தும், அரிசி பஞ்சம் போக்கத் தவறியதற்காக, காமராஜரை, அவரது சொந்த ஊரான விருதுநகரில் தோற்கடித்தனர். 99 சதவீதம் நன்மைகள் செய்தாலும், 1 சதவீதம் செய்யும் தவறை, தமிழர்கள், நிச்சயம் மன்னிப்பதில்லை.வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவன் என்றாலும், தவறு செய்யும் போது, அவனை ஆசிரியர் தண்டிக்கத் தானே செய்கிறார். மனுநீதிச் சோழன் வாழ்ந்த மண்ணில், தவறு செய்தவர் மகனாக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்.கருணாநிதியின் குடும்ப பாசம் தானே, தி.மு.க.,வின் படுதோல்விக்கு காரணமானது. மறுபடியும் தி.மு.க., ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகம் தானே!எனவே, வருங்கால பிரதமராக வர வாய்ப்பிருக்கும் சூழலில், இவற்றையெல்லாம், மோடி, தன் கவனத்தில் கொள்வது நல்லது.

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj

Saturday, June 8, 2013

அம்மா உணவகத்தில் இட்லி, சாதத்தில் வாடை ஏன்?


கி.சந்திரசேகரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும், "அம்மா' உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இங்கு வழங்கப்படும் இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம் முதலியவை நன்றாக இருக்கிறது. ஆனால், இட்லி, தயிர் சாதம் போன்றவற்றில், ரேஷன் அரிசியின் வாடை, சாப்பிடுபவர்களின் அடிவயிறு வரை சென்று, குமட்டல் எடுக்கிறது. சாம்பார் சாதத்தில், சிறிது மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால், வாடை வந்தாலும் கொஞ்சம் சமாளித்து, சாப்பிட்டு விடலாம்.ரேஷன் அரிசியில் மட்டும், ஒரு வித வாடை வருவதற்கான காரணம் என்ன? கடைகளில் விற்கும் அரிசியில், இந்த வாசனை வருவதில்லையே...ரேஷன் அரிசி தயார் செய்யப்படும்
ஆலைகளில், நெல் ஊற வைக்கப்படும் தண்ணீர், மிகவும் பழையதாக இருக்கும் என, நினைக்கிறேன்.ஒரே தண்ணீரில், காலம் காலமாக நெல் ஊற வைக்கப்படுவதால் தான், ரேஷன் அரிசியில், அந்த வாடை மாறாமல் இருக்கிறது. எத்தனை தான் அரிசியை தீட்டி உபயோகித்தாலும், அந்த வாடை மட்டும் நீங்குவதே இல்லை.இந்த குறையைப் போக்க, அவ்வப்போது குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில், இந்த தண்ணீர் முழுவதும் மாற்றப்பட்டு, தொட்டி ”த்தம் செய்யப்பட்டு, புதிய தண்ணீரில் நெல் ஊற வைக்கலாம். இதனால், மக்களுக்கு தரமான அரிசியும் கிடைக்கும்; அர”க்கும், நற்பெயர் கிடைக்கும். மக்கள் வயிற்றுக்கும், எவ்விதக் கோளாறும் ஏற்படாது. இதற்காக, தனிப்பட்ட முறையில் அதிகமாக எந்த செலவும் கிடையாது.

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj

Monday, June 3, 2013

பணம் பதினொன்றும் செய்கிறதே...!


தமிழக முதல்வராக காமராஜர் இருந்த போது, தன் சொந்த மாவட்டமான விருதுநகரில், சில முக்கிய பிரமுகர்களுக்கு, சிவகாசியை சுற்றிலும் பட்டாசு ஆலைகள் நடத்த ஏற்பாடு செய்தார். அன்று, 1960ல், எட்டு பட்டாசு ஆலைகள் இருந்தன. இன்று, 700 ஆலைகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டுள்ளன; இது, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 1965ல், ஆலைகளின், தினக்கூலியாக வேலை செய்தோர், இன்று பட்டாசு ஆலைகளுக்கு அதிபதி. தொழில், மிக ஜோராக நடக்கிறது. ஆனால், இன்று சிவகாசியின், 30 கி.மீ., சுற்றளவுக்கு, காற்றில், நச்சு வாயுக்கள் அதிகம் கலந்துள்ளது. பருவ மழைக்குப் பதில், பட்டாசு ஆலைகள் கக்கும் எரிமழை தான், எங்களுக்கு கிடைத்த விதி. சிவகாசி ஏரியாவை, "குட்டி ஜப்பான்' என்பதை விட, ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான, "குட்டி ஜெய்சால்மர்' என்று அழைப்பது பொருந்தும். ஒருவர், நிலத்தை வாங்கி, தொழிற்சாலை அறைகளை கட்டி, அனுமதி பெற்று, உற்பத்தியை துவக்க செலவு செய்யப்படும் பணத்தில் பாதிக்கு மேல், "மொய்' எழுதுகின்றனர். பின், அந்த ஆலையின் அறைகளை, மறைமுகமாக குத்தகைக்கு கொடுக்கின்றனர். குறைந்தபட்சம் ஒரு அறைக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, ஒரு ஆண்டிற்கு குத்தகை விடப்படுவது உண்டு; செலவு செய்த பணத்தை, ஒரு ஆண்டில் எடுத்து விடுவர். இதில், கோடிக்கணக்கில், வரி ஏய்ப்பும் அரங்கேறி வருகிறது. அரசு எத்தனை சட்ட, திட்டங்கள் போட்டாலும், வரி ஏய்ப்பு, தொழிலாளர் நலன் புறக்கணிப்பு, சுகாதாரக் கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு என, பல, "அன்பளிப்பு'கள், மக்களுக்கு இனாமாக கிடைக்கின்றன. ஆலையை குத்தகைக்கு எடுத்தவரும், கூடிய சீக்கிரம் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால், வேறு வழி என்ன... அல்லும் பகலும் அயராது, உற்பத்தியை பெருக்கி, பட்டாசு பண்டல் போட்டு, லாரியில் ஏற்றி, கஜானாவை நிரப்புவது தான், அவரின் தலையாய கடமை; பொதுமக்கள் என்னவானால் என்ன!

சிவகாசி ஏரியாவில், மே முதல், அக்டோபர் மாதம் வரை, அதிக வெப்பம் உள்ள காலத்தில், ஏதாவது ஒரு மூலையில், பட்டாசு ஆலை வெடித்தபடி தான் இருக்கிறது. மக்கள் மாண்டு போவது வழக்கமாகி விட்டது. வெடிவிபத்து சம்பவம் நடந்தது எனில், பல பேர் வீட்டில், பண மழை தான். மாண்ட உயிருக்கு அதிகபட்சம், 50 ஆயிரம், ஒரு லட்சம் கிடைக்கும். பிறகு, மக்கள், ஏதோ கனவு கண்டது போல, பழைய துக்கத்தை மறந்து, தங்கள் தொழிலில் இறங்கிவிடுகின்றனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஏதோ கடமைக்காக சில நாள் அந்த ஏரியாவை வலம் வருகின்றனர். பணம் பத்தும் செய்யும்... இப்பேர்ப்பட்ட தொழில்களில், பதினொன்றும் செய்து கொண்டிருக்கிறது! 
- ஊ.முருகைய்யா, வெம்பக்கோட்டை, சிவகாசி

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj

Friday, May 31, 2013

கிரிக்கெட் சூதாட்டம்

முந்தாநாள் வரை நாயகனாக போற்றப்பட்ட கேப்டன் டோனி நேற்று வில்லனாக மாற்றப்பட்டுள்ளார் ஊடகங்களில். சேம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக இங்கிலாந்து செல்லுமுன் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்பதால் தோழர்களுக்கு கோபம். 

அக்கேள்விகளை தவிர்த்தபோது டோனி  புன்னகைத்ததால் இன்னும் கடுப்பு. ‘வாய் திறக்க முடியாத நிலையில் இருக்கிறேன், மன்னித்து விடுங்கள் என்பதுபோல தர்மசங்கடத்துடன்  புன்னகைத்தால் பரவாயில்லை. மாறாக அதில்  என்ன ஆணவம் தெரியுமா.. ஒட்டுமொத்த இந்தியர்களை அவமதித்துவிட்டது டோனியின் மவுனம்’ என மும்பை பத்திரிகை விளாசியிருக்கிறது. 

பதில் தெரியுமோ தெரியாதோ எந்த கேள்வி கேட்டாலும் பிரபலங்கள் ஏதாவது பதில் சொல்லியாக வேண்டும் என அநேக செய்தியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். விஷயமே தெரியாவிட்டாலும் டீவியில் தோன்றி எல்லா விஷயங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக அலச பலர் தயாராக இருக்கிறார்கள். டோனியும் அப்படி கருத்து கந்தசாமியாக மாறவேண்டும் என்ற வாதம் நியாயமற்றது.

சூதாட்டம் பற்றி டோனிக்கு எதுவும் தெரியாமல் இருக்கலாம். தெரிந்திருந்தாலும் புலன் விசாரணை நடக்கும் நேரத்தில் வெளியிடுவது  முறையல்ல என நினைத்திருக்கலாம். இந்த நேரத்தில் எதை சொன்னாலும் வேறுமாதிரி பிரசுரமாகி வம்பில் மாட்டிக் கொள்வோம் என்று மிரண்டிருக்கலாம். இவை எதுவும் இல்லையென்றாலும் பதில் சொல்லாமல் மவுனம் காக்க அவருக்கு உரிமை இருக்கிறது. கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தலைவர்கள் பதிலளிப்பது வழக்கமானது. டோனியின் புன்னகைக்கு அதுதான் அர்த்தம். 

கடுமையான போட்டியில் கரை சேர துரும்பை தூணாக்குவதும் உரத்த குரலெடுத்து செயற்கையான பரபரப்பை ஏற்படுத்துவதும் ஆங்கில செய்தி சேனல்களின் இலக்கணம். படித்தவர்களுக்கான ஊடகமான பத்திரிகைகளில் பிரசுரமாகும் செய்திகளில் நிதானம் இன்றியமையாதது. ஒரு வேட்டைக்காரன் தான் வீழ்த்திய வெவ்வேறு விலங்குகளின் தலைகளை வரவேற்பறை சுவரில் வரிசையாக தொங்கவிட்டு, ‘எப்படி எனது வீரம்?’ என்று பெருமையுடன் கேட்கலாம். ஒரு செய்தியாளன் அதுபோல சிந்திப்பது ஊடகத்துறைக்கு உகந்ததல்ல.
- தினகரன் தலையங்கம்- வேட்டைக்கார சிந்தனை 

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj

Thursday, May 23, 2013

அழிக்க மட்டுமல்ல ஆயுதம்


பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை போர்க் கப்பலில் இருந்து வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்திருக்கிறது இந்தியா. 290 கிலோமீட்டர் வரை தாழ்வாக பறந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஆற்றல் படைத்த இந்த ஆயுதம், ஒலியைவிட மும்மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. இதற்கான நவீன தொழில்நுட்பம் பல நாடுகளுக்கும் கிடைத்தால் உலக அமைதிக்கு ஆபத்து என்ற அடிப்படையில், அது பரவாமலிருக்க வல்லரசுகள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. எனவே, இந்தியாவுடன் சேர்ந்து இதனை தயாரித்துத் தர முன்வந்துள்ள ரஷ்யா, அதன் பறக்கும் தொலைவை 300ல் இருந்து 290 ஆக குறைத்தது. 

பான் கார்டு இருந்தால்தான் 50,000 டெபாசிட் செய்ய முடியும் என்பதால் ஆயிரம் ரூபாய் குறைப்பது மாதிரி. விதிகளை சுற்றிச் செல்ல எத்தனையோ வழிகள். ரஷ்யாவுடன் இணைந்து பிரமோஸ் தயாரிக்கும் திட்டம் ஏறத்தாழ பத்தாண்டுக்கு முன் தொடங்கியது. அதில்  பல ரகங்கள். தரையில் இருந்து, கனரக வாகனத்தில் இருந்து, கப்பலில் இருந்து என சில வகை. நேராக, சரிவாக, தாழ்வாக பறப்பதற்கென்று சில வகை. நிலமட்டத்தில் இருந்து 30 அடிக்குள் பறக்கும்போது எதிரியின் கண்காணிப்பு கருவிகளின் பார்வையில் சிக்காது. 

கடற்படை கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் குறிவைத்து தாக்கி அழிக்க வசதியானவை. எட்டாயிரம் பத்தாயிரம் கோடி செலவில் இவை உருவாக்கப்படுகின்றன. ஆயுத பலத்தால் எதையும் சாதிக்க முடியாது என கருதுபவர்கள் நிச்சயம் விமர்சனம் செய்வார்கள். ஏழைகள் மிகுந்த நாட்டுக்கு இந்த ஆயுத செலவுகள் அவசியமா என கேட்பார்கள். 

உலகம் போகும் பாதையில் இருந்து இந்தியா மட்டும் ஒதுங்கி நிற்க முடியாது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் உள்ள பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளவும், வர்த்தகம் மூலம் உறவை பலப்படுத்திக் கொள்ளவும் முயற்சிகள் எடுக்கும் அதே நேரத்தில் ராணுவ பலத்தை அதிகரித்து தயார் நிலைக்கு கொண்டுவர வேண்டியதும் அத்தியாவசியமான நடவடிக்கை. 

நாம் செய்வது சட்டப்படி சரியானது, நியாயமானது என்றாலும் அதனால் மட்டுமே நமக்கு ஆதரவு கிடைத்துவிடாது. வலிமை மிகுந்தவன் பேசும்போதுதான் உலகம் கவனிக்கிறது. மிகச் சிறந்த ஆயுதங்கள் நம் வசம் இருந்தால் எதிரிகளையும் நண்பர்களாக மாற்ற முடியும்.
-தினகரன் தலையங்கம் 23.05.2013

#1950களின் விபத்துக்குப் பிறகு விமானம் தயாரிக்காமல் இருந்த ஸ்விஸ் இப்ப தயாரிக்க ஆரம்பிச்சிருக்கு, உலகில் போரிடாத நாடும் அதுவே...வரும் காலத்தில் அவர்களும் போர்க்களத்தில் குதித்தாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை    

http://dustent.blogspot.com/ http://fromhobby2money.blogspot.com/2012/11/easy-to-install-facebook-comment-box.html#ixzz2McaQhSYj